close
Choose your channels

பாவனியுடனான லவ் பிரச்சனை: அபினவ் மனைவி சொன்னது என்ன தெரியுமா?

Sunday, November 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்பதும் கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரம்யாகிருஷ்ணன் தொகுப்பாளினியாக மாறி உள்ளார் என்பதும் பிக்பாஸ் வீட்டிற்கு இரண்டு வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் வந்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் திடீரென ராஜு, அபினவ்வை பார்த்து, பாவனியை நீ லவ் பண்ணுகிறாயா? என கேட்டது, அபினவ்வை மட்டுமின்றி சக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

ராஜூ இவ்வாறு கூறியது குறித்து பிரியங்கா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தார் என்பதும் அது மட்டுமின்றி பாவனி மற்றும் அபிநவ் காதல் குறித்து ஏற்கனவே பல முறை போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்கள் என்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அபினவ் - பாவனி லவ் பிரச்சனை குறித்து அபினவ் மனைவி அபர்ணா தனது சமூக வலைத்தளத்தில், ‘நீங்கள் எப்படிப்பட்டவர் என்று எனக்கு நன்றாக தெரியும், என்னை போல் உங்களை யாராலும் புரிந்து கொண்டிருக்க முடியாது. உங்களை நான் எப்போதும் நேசிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் ’ஒரு அன்பான மனைவி தனது கணவர் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து விட்டால் உலகம் என்ன சொன்னாலும் அது மாறவே மாறாது’ என்றும் தெரிவித்துள்ளார். அபர்ணாவின் இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.