close
Choose your channels

அடுத்த ஓவியா-ஆரவ்வா அபிராமி-கவின்?

Tuesday, June 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் ஓவியா-ஆரவ் காதலும், பிக்பாஸ் இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா காதலும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுத்தது. ஆனால் இந்த காதல் நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்தே சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் நாளே பார்த்தவுடன் காதல் என்ற வகையில் கவினை தான் லவ் பண்ணுவதாக ஷெரினிடம் அபிராமி கூறுவது பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை தருகிறது. அபிராமியை அறிமுகம் செய்தபோது அவரை ஒரு மெச்சூர் பெண்ணாக காண்பித்தனர். தன்னுடைய குடும்பத்தை தனது வருமானத்தின் மூலம் காப்பாற்றி வரும் ஒரு பொறுப்புள்ள பெண்ணாகவும், ஒரு மனப்பக்குவம் நிறைந்த பெண்ணாகவும் காண்பித்துவிட்டு, பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே அவர் கவினை காதலிப்பதாக சொல்வது உண்மையிலேயே அபிராமி சொல்லும் கருத்தா? அல்லது பிக்பாஸ் வசனம் எழுதி கொடுத்ததை வாசிக்கின்றாரா? என்ற ஐயம் பார்வையாளர்களுக்கு எழுகிறது.

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் திரைக்கதை ஆசிரியர்களின் குழுவினர் முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. ஒரு ரியாலிட்டி ஷோவில் இதுபோன்ற சம்பவங்களை இணைத்தால் சுவாரஸ்யம் கூடும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நம்பகத்தன்மை முற்றிலும் இழந்துவிடும் அபாயம் இருப்பதை பிக்பாஸ் உணர்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.