close
Choose your channels

திருச்செந்தூர் முருகன் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் பலி

Thursday, December 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றும், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடுமான திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே இருந்த பிரகார மண்டபம் சற்றுமுன்னர் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்தின் இடிபாடுகளில் ஒருசிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பிரகாரம் கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ளது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்புப்படை மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் தற்போது திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருப்பதாகவும், இன்று மதியம் 3 மணிக்குள் அவர் கோவிலை சென்றடைவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் கோவிலுக்குள் மறு அறிவிப்பு வரும் வரை வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.