'அச்சமுண்டு அச்சமுண்டு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,August 03 2021]

பிரசன்னா-சினேகா நடிப்பில் இயக்குனர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’அச்சமுண்டு அச்சமுண்டு’. கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது மட்டுமின்றி இந்த படத்தில்தான் பிரசன்னா மற்றும் சினேகா இடையே காதல் ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அச்சமுண்டு அச்சமுண்டு’ வெற்றிப்படத்தை அடுத்து ’நிபுணன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். அருண் வைத்தியநாதன் இயக்கும் அடுத்த படம் ஒரு குழந்தைகளுக்கான படம் என்றும் இந்த படத்தில் பெரும்பாலான குழந்தைகள் நட்சத்திரம் தான் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தை அவர் தனது சொந்த நிறுவனமான யுனிவர்சல் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் மனநிலை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டது என்பதை குறிக்கும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்றும் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் இந்த படத்திற்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

 

More News

'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் தென்னிந்திய பிரபலங்கள்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிய 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

கொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி! நாம் தமிழர் பிரமுகர் கண்டனம்!

கொஞ்சமாவது நன்றியோடு இருங்கள் என விஜய் சேதுபதிக்கு நாம் தமிழர் பிரமுகர் ஒருவர் கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்காக மூன்று வருடங்கள் காத்திருந்தேன்: விஷ்ணு விஷாலின் வைரல் டுவிட்

தமிழ் திரையுலகின் இளைதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது 'எப்.ஐ.ஆர்' மற்றும் 'மோகன்தாஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தோழியின் மரணம் அறிந்தபின் யாஷிகாவின் உருக்கமான பதிவு

சமீபத்தில் நடிகை யாஷிகா, அவரது தோழி பவானி மற்றும் நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது தெரிந்ததே.

ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி!

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பெல்ஜியம் அணியிடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது