close
Choose your channels

'அச்சமுண்டு அச்சமுண்டு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்

Tuesday, August 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரசன்னா-சினேகா நடிப்பில் இயக்குனர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’அச்சமுண்டு அச்சமுண்டு’. கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது மட்டுமின்றி இந்த படத்தில்தான் பிரசன்னா மற்றும் சினேகா இடையே காதல் ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அச்சமுண்டு அச்சமுண்டு’ வெற்றிப்படத்தை அடுத்து ’நிபுணன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். அருண் வைத்தியநாதன் இயக்கும் அடுத்த படம் ஒரு குழந்தைகளுக்கான படம் என்றும் இந்த படத்தில் பெரும்பாலான குழந்தைகள் நட்சத்திரம் தான் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தை அவர் தனது சொந்த நிறுவனமான யுனிவர்சல் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் மனநிலை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டது என்பதை குறிக்கும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்றும் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் இந்த படத்திற்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.