close
Choose your channels

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு… தொடரும் அவலம்!!!

Wednesday, October 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு… தொடரும் அவலம்!!!

 

உத்திரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வரும் சமயத்தில் தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோண்டா பகுதியை அடுத்துள்ள பாஸ்கா எனும் இடத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் குற்றவாளியை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒரே குடும்பத்தைச் சார்ந்த 17, 12, 8 வயதுள்ள 3 சிறுமிகளும் நேற்று அதிகாலை தங்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஆஷிஷ் எனும் இளைஞன் அவர்கள்மீது ஆசிட் வீசியிருக்கிறான். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்கள் கோண்டா பகுதியில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதில் மூத்த பெண்ணுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற இருவரும் லேசான காயங்களுடன் தப்பி இருக்கின்றனர்.

இந்நிலையில் ஆசிட் வீசிய ஆஷிஷ் தப்பியோட முயற்சித்தபோது போலீசார் அவனை துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்து இருக்கின்றனர். அந்த விசாரணையில் ஆசிட் விசப்பட்ட மூத்தப் பெண்ணை இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் அந்த காதலுக்கு எந்த பதிலும் கிடைக்காததால் ஆசிட் வீசியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.