close
Choose your channels

பெண் கண்டக்டர் மீது ஆசிட் வீச்சு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் யார்?

Friday, December 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெங்களூரு அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் பெண் மீது 2 மர்ம நபர்கள் திடீரென ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடிவிட்ட சம்பவம் பெங்களூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெங்களூர் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் 35 வயது பெண் இந்திராபாய் எனப்வர் இன்று அதிகாலை சுமார் 5.45 மணி அளவில் வேலைக்கு செல்வதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 நபர்கள் அவருக்கு மிக அருகில் வந்து திடீரென அவரது முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு மாயமாய் மறைந்துவிட்டார்கள்

ஆசிட் வீச்சினால் முகம் மற்றும் உடல் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்திரா பாய் அலறி துடித்தார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவருக்கு அதிக அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்

இந்திராபாயின் கணவர் பாலாஜி என்பவரும் பெங்களூர் அரசு பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்திராபாய் மீது ஆசிட் வீசியது யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.