தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரருக்கு ஜாமீன்.. ஆனால் நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

  • IndiaGlitz, [Friday,October 06 2023]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒரு முக்கிய நிபந்தனையும் விதித்துள்ளது.

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் புகார் அளித்திருந்தார். நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாகவும், ரூ.200 கோடி மதிப்புள்ள அந்த திட்டத்தில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் வரும் என்று ஆசை வார்த்தை கூறி தன்னிடம் பண மோசடி செய்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த மாதம் 7ஆம் தேதி ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்தனர். இந்த நிலையில் இருமுறை ரவீந்தர் சந்திரசேகர் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது ரவீந்தர் இரண்டு கோடி ரூபாய் திருப்பி தந்து விட்டதாக கூறுவது தவறு என்றும் அவர் பணம் தரவில்லை என்றும் புகார்தாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை அடுத்து அவரது வங்கி ஆவணங்களை சரிபார்க்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இன்றைய விசாரணையில் ரவீந்தர் வங்கி கணக்கில் இருந்து பல பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதால் அவை அனைத்தும் இந்த வழக்கிற்கு தொடர்புடையதா என தெரியவில்லை என்று வழக்கறிஞர் கூறினார். இதனை அடுத்து பண பரிவர்த்தனை தொடர்பான முழு விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, ரூ.5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை ரவீந்தர் சந்திரசேகர் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

More News

நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் 90களின் ஹீரோயின்.. யோகி பாபுவுக்கு அம்மா கேரக்டர்..!

கடந்த 90களில் ரசிகர்களின் மனதில் குடியிருந்த நடிகை, நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், அவர் யோகி பாபு அம்மா கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சிறகடிக்க ஆசை: முத்து குடும்பத்தில் இன்னொரு சிக்கல்..  சுருதியால் மீனாவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறுகிய காலத்திலேயே இந்த சீரியல் டாப் 10  டிஆர்பியில் வந்துவிட்டது

ஜோவிகாவுக்கு இவ்வளவு கோபம் வருமா? விசித்ராவுடன் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர் என்பதை பார்த்தோம்

தளபதி விஜய் மிகவும் வருத்தப்பட்டார்.. இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு: தயாரிப்பாளர் லலித்..!

'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் தளபதி விஜய் மிகவும் வருத்தப்படுவதாகவும் எனவே இந்த படத்தின் ஒரு புரமோஷன் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் விரைவில்

கமல், சூர்யா, கார்த்தி, அர்ஜுன் தாஸ் நடிப்பில் 'லியோ'? உறுதி செய்யப்பட்டுள்ளதா லோகேஷின் LCU?

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'லியோ' திரைப்படம்  அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் லோகேஷ் கனகராஜின்