close
Choose your channels

சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்: ஹீரோ யார் தெரியுமா?

Friday, June 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் காமெடி ஜோடியான கவுண்டமணி - செந்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் செந்திலின் மகனும் தற்போது சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 80 களில் இருந்து பல திரைப்படங்களில் கவுண்டமணியுடனும், தனியாகவும் காமெடி வேடத்தில் கலக்கியவர் நடிகர் செந்தில். இவர் நடித்த பல திரைப்படங்களின் காமெடி காட்சிகள் இன்றும் தொலைக்காட்சிகள் பிரபலமாகி உள்ளன. குறிப்பாக ’கரகாட்டக்காரன்’ படத்தின் வாழைப்பழ காமெடி காட்சி, சொப்பனசுந்தரி காமெடி காட்சியை ஆகியவற்றை யாராலும் மறக்க முடியாது.

இந்த நிலையில் செந்திலின் மகன் மணிகண்டபிரபு சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் ’தடை உடை’ என்ற படத்தின் மூலம் நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு அறிமுகமாகிறார். இந்த படத்தில் செந்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும், செந்திலின் மகனாகவே மணிகண்ட பிரபு நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சினிமாவில் அறிமுகமாகும் மணிகண்ட பிரபு செந்திலின் மூத்த மகனாவார். இளைய மகன் ஹேமசந்திரா பிரபு என்பவர் ஏற்கனவே திரைப்பட இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.