ரூ.100க்கு வீட்டில் இருந்தே படம் பார்க்கலாம். ஆரி யோசனை

  • IndiaGlitz, [Tuesday,July 04 2017]

ஜிஎஸ்டி பிரச்சனையால் கடந்த சில நாட்களாக திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. ஜிஎஸ்டி வரி 28%, தமிழக அரசின் வரி 30% என மொத்தம் 58% வரி கட்டி திரைத்தொழில் நடத்துவது என்பது சாத்தியமே இல்லை என்பது அனைத்து திரையுலகினர்களின் கருத்தாக உள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக திரையரங்குகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன
இந்த நிலையில் 'உறுதிகொள்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஆரி யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். இனிமேல் திரையரங்குகளை மட்டும் நம்பி தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் நான் ஒரு யோசனை கூறியுள்ளேன்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு என ஒரு ஆப் தயார் செய்து அதில் மாதம் ரூ.100 பெற்று கொண்டு அனைத்து திரைப்படங்களையும் ரிலீஸ் செய்யலாம். தமிழகத்தில் 7 கோடி பேர் உள்ளனர். அதில் சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் 4 கோடி பேர். குறைந்தது ஒருகோடி பேர் இந்த ஆப் மூலம் சினிமா பார்த்தால் ரூ.100 கோடி வருமானம் கிடைக்கும். இந்த பணத்தை தயாரிப்பாளர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
கேபிள் டிவிக்கே ரூ.100 கொடுக்கும் பொதுமக்கள் ஒரு மாதத்தில் ரிலீஸ் ஆகும் அனைத்து படங்களையும் பார்க்க ரூ.100 கொடுக்க தயங்க மாட்டார்கள். எனவே இதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆப் வெளியாகும். இதில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்பட பலரும் இணைய வாய்ப்பு உள்ளது' என்று பேசினார்.

More News

தியேட்டரில் கூட்டம் குறைய கமல் தான் காரணம்: மன்சூர் அலிகான்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலர் கிண்டல் செய்து மிமி கிரியேட் செய்தாலும் இந்த நிகழ்ச்சியை கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோர் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன...

கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் திடீர் தற்கொலை?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்த தினேஷ்குமார் என்பவர் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். தினேஷ்குமார் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் இருந்ததாகவும் இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது...

சபாநாயகர் தனபால் உடல்நலக்குறைவு: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோவில் அனுமதி

தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் அவர்களுக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

மகாபாரத 'திரெளபதி' கேர்கடரில் நயன்தாரா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் வெற்றியை அடுத்து 'சங்கமித்ரா' உள்பட பல சரித்திர படங்கள் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றனர்...

காஜல் அகர்வாலை தேடி வரும் எம்.எல்.ஏ வாய்ப்பு

அஜித்துடன் விவேகம்' மற்றும் விஜய்யுடன் 'மெர்சல்' படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு 'எம்.எல்.ஏ' என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது...