'8 தோட்டாக்கள்' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ

  • IndiaGlitz, [Friday,April 14 2017]

சமீபத்தில் வெளிவந்த இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படம் அனைத்து தரப்பினரின் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்களில் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இரண்டாவது படத்திற்கு தயாராகிவிட்டார். இவருடைய அடுத்த படத்தில் பிரபல நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் நாயகி மற்றும் பிற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதர்வா தற்போது தனது சொந்த தயாரிப்பில் 'செம போத ஆகாதே' உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மேலும் ஒரு படமாக ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. '8 தோட்டாக்கள்'; படம் போலவே இந்த படமும் ஒரு ஆக்சன் த்ரில்லர் படம் என்று கூறப்படுகிறது.

More News

கார்த்திக் தற்கொலை வழக்கு. மைனா நந்தினி கைது ஆவாரா?

பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் சமீபத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மக்களின் கவிஞர் 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்' பிறந்த தின கட்டுரை

இந்த பாடலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் எழுதி சுமார் 50 வருடங்கள் ஆகிவிட்டது.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய சுற்றறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் சமீபத்தில் முடிந்து அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஷால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

போதை கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

அழகில்லாத கணவனை கிரைண்டர் கல்லைத்தூக்கி போட்டு கொலை செய்த மனைவி, டீ போட்டு கொடுக்காத மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவன் என்ற வரிசையில் இன்று 24 மணி நேரமும் போதையில் இருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை அவருடைய மனைவி ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று வடலூர் அருகே நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ஆபத்தா

இந்தியாவில் இருந்து சட்டரீதியாக பிரிய தயார். இயக்குனர் கெளதமன்

டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குனர் கெளதமன் தலைமையில் சுமார் 50 இளைஞர்கள் பூட்டு போட்டனர்