நீண்ட இடைவெளிக்கு பின் வந்த அஜித்தின் அதிகாரபூர்வ பதிவு: ஸ்தம்பித்த இணையதளங்கள்!

  • IndiaGlitz, [Monday,May 30 2022]

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதால் அவர் சொல்ல விரும்பும் கருத்துகளை தனது மேனேஜரின் சமூக வலை தளங்கள் மூலமே வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் அஜித் மேனேஜரின் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. நாம் குழந்தைகளாக இருந்தபோது கேள்விப்பட்ட நீதி கதை தான் இந்த பதிவு.

ஒரு தம்பதியினர் ஒரு கழுதையுடன் சென்று கொண்டிருக்கும்போது கழுதை மீது ஏறி உட்கார்ந்து செல்லாமல் தம்பதியினர் நடந்து செல்கின்றனர் என பார்வையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதனையடுத்து இருவரும் கழுதை மீது ஏறி சென்றபோது ஒரு கழுதை மீது இருவர் ஏறிக்கொண்டு கழுதையை துன்புறுத்துகிறார்கள் என்று கூறினார்கள். அதன் பிறகு மனைவியை மட்டும் கழுதை மேல் உட்கார வைத்துவிட்டு கணவர் நடந்து சென்ற பொழுது தன் மனைவியை முதலாளி போல் உட்கார வைத்து கொண்டு செல்கிறார் இந்த கணவர் என்று குற்றஞ்சாட்டினர். அதன் பிறகு கணவர் மட்டும் உட்கார்ந்து கொண்டு சென்றபோது, ஒரு பெண்ணை நடக்க வைத்து விட்டு அந்த ஆண் கழுதை மேல் செல்கிறார் என்று குற்றம் கூறினார்கள். அதன் பிறகு கழுதையை இருவரும் தூக்கிக் கொண்டு சென்றபோது கழுதை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு செல்லாமல் இந்த மடையர்கள் கழுதையை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் என்று கூறினார்கள்.

இந்த நீதி கதையின் மூலம் குறை சொல்பவர்களின் கருத்தை காதில் வாங்கி கொள்ளக்கூடாது என்ற கருத்தை அஜித்தின் மேனேஜர் தெரிவித்துள்ளார். இந்த நீதிக்கதையின் பதிவு தற்போது இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
 

More News

கட்டிப்பிடிக்கும் கணவர், கர்ப்பமானதை அறிவித்த சன் டிவி தொகுப்பாளினி!

சன் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஒருவர், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

உள்ளாடை விளம்பரத்தில் கே.எல்.ராகுல்: நடிகை கஸ்தூரியின் கமெண்ட் என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் உள்ளாடை விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

97 கோடி நஷ்டத்திற்கு பின் கங்கனா ரனாவத் எடுத்த அதிரடி முடிவு!

கங்கனா ரனாவத் நடித்த 'தாக்கட்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்தது என்றும் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 3 கோடி மட்டுமே

இந்திய சினிமாவின் 'டான்' உடன் ஒரு சந்திப்பு: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியான பதிவு

இந்திய சினிமாவின் 'டான்'  உடன் சந்தித்த அந்த 60 நிமிடங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிமிடங்கள் என சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

இந்த முறை நான் அடிக்கிற அடி மரண அடியா இருக்கும்: 'தி லெஜண்ட்' டிரைலர்

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்'  என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான டிரெய்லர்