நான் யார் என்பதை மற்றவர்கள் வரையறுக்க அனுமதிக்க மாட்டேன்: அஜித் அளித்த பரபரப்பு பேட்டி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நான் யார் என்பதை மற்றவர்கள் வரையறுக்க அனுமதிக்க மாட்டேன் என்று நடிகர் அஜித் வெளிநாட்டு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்தை பொருத்தவரை, அவர் ஊடகங்களை சந்திக்க மாட்டார், எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சமீபகாலமாக கார் பந்தய போட்டிகளில் கலந்துகொள்ள வெளிநாடுகள் செல்லும் போது, அங்குள்ள சில ஊடகங்களுக்கு மட்டும் பேட்டி அளித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது அவர் ஒரு ஊடகத்திற்குப் பேட்டி அளித்தபோது, "நான் யார் என்பதை மற்றவர்கள் வரையறுக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "நான் ஒரு சாதனையாளராக இருக்க விரும்புகிறேன். என் வாழ்வின் முடிவில், எனது நேரம் வரும்போது, நான் என்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்து மகிழ்ச்சி அடைவேன்.
நான் ஏதோ செய்ய முயற்சித்தேன், ஏதோ சிலவற்றை செய்தேன் என்று நினைத்து நான் மகிழ்ச்சி அடைவேனே தவிர, நான் யார் என்பதை மற்றவர்கள் ஒருபோதும் வரையறுக்க அனுமதிக்க மாட்டேன்," என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த வெளிப்படையான பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kishore Sabarinathan
Contact at support@indiaglitz.com
Comments