இந்த சந்தேகம் எனக்கு இருக்கின்றது: விஜய் அரசியல் குறித்து நடிகர் பார்த்திபன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஒரு சில நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு பின்னர் பின்வாங்கி விட்டார்கள் என்றும், அதேபோல தான் விஜய் மீதும் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், விஜய்யின் அரசியல் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் சூழலில், இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் பதில் அளிக்கையில்,
"நண்பர் விஜய்க்கு அரசியலுக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. அவர் சினிமா துறையில் ஒரு ராஜாங்கம் நடத்தி வருகிறார். அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், கலெக்ஷன் மன்னன்; மேலும், அவர் 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர்.
தனது சிம்மாசனத்தை விட்டுவிட்டு மக்கள் பிரச்சனைக்காக பேச வருகிறார். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். மாற்றம் ஒன்றுதான் மாறாதது. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம்.
ஏற்கனவே சில நடிகர்கள் அரசியலுக்கு வந்து பின்வாங்கியதை பார்த்தோம். விஜய்யும் பின்வாங்கி விடுவாரோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. இருந்தாலும், இந்த சந்தேகத்தை ஊதி பெரிதாக விரும்பவில்லை. அவரை நாம் ஏன் பயமுறுத்த வேண்டும்? அதனால், விஜய் முனைப்புடன் அரசியல் செய்யட்டும்," என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com