மும்மொழி, இருமொழி கொள்கை ஏமாற்று, மோசடி: ஒருமொழி கொள்கையே போதும்: தமிழ் நடிகர்

  • IndiaGlitz, [Monday,August 03 2020]

இந்தியா முழுவதும் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று புதிய கல்வி திட்டத்தின் படி மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இரு மொழிக் கொள்கையே தமிழகத்தில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் சற்றுமுன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’தமிழகத்தில் மும்மொழி கொள்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் மாண்புமிகு அம்மாவின் அரசின் கொள்கையான இரு மொழிக் கொள்கைதான் அமல்படுத்தப்படும் என்றும் மும்மொழிக் கொள்கை குறித்த அறிவிப்பு வேதனையை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இருமொழி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை குறித்து நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் தனது பாணியில் விமர்சனம் செய்துள்ளார். மும்மொழிக்கொள்கை என்பது மோசடி என்றும், இரு மொழிக் கொள்கை என்பது ஏமாற்று என்றும் கூறிய அவர் ஒருமொழிக் கொள்கையே உரிமை கொள்கை என்பதை எதிர்கால நாம் நிலைநிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழை மட்டுமே நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும் தமிழ் என்ற ஒருமொழி கொள்கையையே தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கருணாசின் இந்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

'பணம்' குறித்து ஓவியா கூறிய தத்துவ மழை: நெட்டிசன்கள் விவாதம்

பணம் குறித்து ஓவியா கூறிய தத்துவம் ஒன்றால் நெட்டிசன்கள் கடுமையான விவாதம் நடத்தி வருகின்றனர்

சென்னையில் சரசரவென சரியும் கொரோனா எண்ணிக்கை!!! விரைவில் விடிவுவரும் என நம்பிக்கை!!!

கடந்த சில மாதங்களாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த சென்னை மாநகரம் தற்போது குறைந்த அளவிலான பாதிப்புகளை மட்டுமே கொண்டிருக்கிறது

மற்றொரு விபரீதம்… போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்து 3 பேர் உயிரிழப்பு…

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்தால் 19 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

13 வயது சிறுவனை 2 வருடங்களாக பாலியல் டார்ச்சர் செய்த 31 வயது பெண்: போக்சோவில் கைது! 

13 வயது சிறுவனை இரண்டு வருடங்களாக 31 வயது விதவை பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து போக்சோ ச

கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி வாங்க வாலிபர் செய்த திருட்டு: சிசிடிவியால் சிக்கியதால் பரபரப்பு

மனைவி குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி, கம்மல் வாங்குவதற்காக சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்ட சென்னை வாலிபர் ஒருவர் சிசிடிவி வீடியோவால் சிக்கியுள்ள சம்பவம்