ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் இணைந்த 'தெறி' நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டி உள்பட ஒருசில இடங்களில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் அரசின் அனுமதி கிடைத்ததும் ‘அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி ரிலீஸாகுமா? அல்லது தள்ளிப்போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் அர்ஜெய் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை நடிகர் அர்ஜெய் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யின் ‘தெறி’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, ‘பாயும் புலி’ மற்றும் பிரபுதேவாவின் ‘தேவி 2’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க கிடைக்க வாய்ப்பு பொன்னான வாய்ப்பு என்றும், இயக்குனர் சிவா அவர்கள் இந்த வாய்ப்பை தந்ததற்கு மிகவும் நன்றி என்றும் அர்ஜெய் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
 

More News

அமெரிக்க காவலில் சிக்கிக் கொண்ட சீனாவின் பெண் விஞ்ஞானி!!! தொடரும் பரபரப்பு???

கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து அமெரிக்கா சீனாவின் மீது குற்றம்சாட்டத் தொடங்கியதில் இருந்தே ஒட்டுமொத்த உலக நாடுகளும் இரு பிரிவாக காட்சியளிக்கின்றன

2 லட்சத்தை தாண்டியது தமிழக கொரோனா பாதிப்பு: குணமானோர் எண்ணிக்கையும் உயர்வதால் மக்கள் நிம்மதி!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 5000, 6000 என அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் சுமார் 7000 பேர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள விஷால்! பரபரப்பு தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷாலும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

லாவண்யாவுடன் திருமணம், தமன்னாவுடன் தொடர்பு: பரபரப்பு பேட்டி அளித்த நடிகர் கைது!

நடிகை லாவண்யா திரிபாதியை திருமணம் செய்ததாகவும் அவர் மூன்று முறை கர்ப்பமாகி, கருக்கலைப்பு செய்ததாகவும் தமன்னா உள்பட பல நடிகைகள் என்னுடன் தொடர்பு இருந்ததாகவும்

விடுதலைச்சிறுத்தைகளின் புகாருக்கு பதிலடி கொடுத்த காயத்ரி!

கந்த சஷ்டி கவசம் குறித்த பிரச்சனையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நடிகை காயத்ரி ரகுராமன்,