close
Choose your channels

ஆர்யா மீது ரூ.71 லட்சம் மோசடி புகார் கொடுத்த இளம்பெண்: பெரும் பரபரப்பு

Wednesday, July 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஆர்யா மீது ரூ.71 லட்சம் மோசடி புகார் கொடுத்த பெண் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல நடிகர் ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பாக அவரது நடிப்பிற்கும் அவர் அந்த கேரக்டராகவே மாறியதற்காக உழைத்த உழைப்பிற்கும் மிகப் பெரிய பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் ஆர்யா மீது ரூ.71 லட்சம் மோசடி செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வித்ஜா என்ற பெண் சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்துள்ள வழக்கில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரூபாய் 71 லட்சம் ஆர்யா மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கு குறித்து பதிலளிக்க காலம் அவகாசம் சிபிசிஐடி கோரியதை அடுத்து இந்த வழக்கு ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.