close
Choose your channels

பிரபல தமிழ் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு!

Sunday, April 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று கொரோனாவால் இந்தியாவில் 2.6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர் என்பது குறித்த செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழ் திரையுலகின் பிரபல ஹீரோக்களில் ஒருவரான அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் அதர்வா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா அறிகுறிகள் கடந்த சில நாட்களாக தென்பட்டதை அடுத்து பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையில் எனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நான் என்னுடைய வீட்டில் தனிமைப் படுத்தி கொண்டேன். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் நான் குணம் அடைவேன் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

நடிகர் அதர்வா தற்போது ’தள்ளி போகாதே’, ‘குருதியாட்டம்’, ‘ஒத்தைக்கு ஒத்தை’, ‘ருக்குமணி வண்டி வருது’ ஆகிய படங்களில் அடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.