close
Choose your channels

கொரோனாவுக்கு எதிரான போர்: ரூ.1.25 கோடி கொடுத்த பிரபல நடிகர்

Friday, April 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடி கொண்டிருக்கும் நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக திரையுலகை சேர்ந்த பலர் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் அரசுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக தெலுங்கு திரையுலக முன்னணி நடிகர்கள் பலர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மகனுமாகிய என்.டி.ஆர் பாலகிருஷ்ணா கொரோனா தடுப்பு நிதியாக ரூ.1.25 கோடி நிதியுதவி செய்துள்ளார். இதில் ஆந்திர மாநில முதல்வர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சம், தெலுங்கானா மாநில முதல்வர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் மற்றும் ரூ.25 லட்சம் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நிதியாக தெலுங்கு நடிகர்கள் பலர் நிதியுதவி செய்து வரும் நிலையில் தமிழ் நடிகர்களும் விரைவில் நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos