close
Choose your channels

நடிகர் பாலசரவணன் வீட்டில் நடந்த சோகம்: திரையுலகினர் ஆறுதல்

Friday, May 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பாலசரவணன் வீட்டில் நிகழ்ந்த சோக சம்பவத்திற்கு திரை உலகினர் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் திரையுலகினர் பலர் பலியாகி வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். நேற்று கூட பாடகர் கோமகன், நடிகர் பாண்டு ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பாலசரவணன் தங்கையின் கணவர் கொரோனாவால் காலமானார். அவருக்கு வயது 32 மட்டுமே என்பது சோகத்தின் உச்சம் ஆகும்

இது குறித்து நடிகர் பாலசரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அன்பு நண்பர்களே... இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்... 32வயது...
தயவு கூர்ந்து மிக கவனமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.