இரட்டை குழந்தைகளுடன் வொர்க்-அவுட் செய்யும் தமிழ் நடிகர்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,May 18 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் ’காதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகர் பரத். அதன்பின்னர் ’வெயில்’ ’கூடல் நகர்’ ’பழனி’ ’ஆறுமுகம்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் 4 தமிழ் மற்றும் 4 மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ஒரு ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பரத், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் சற்று முன் அவர் தனது இரட்டை குழந்தைகளுடன் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பரத் தனது நீண்ட நாள் தோழியான ஜெஷ்லி என்பவரை கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு 2018ஆம் ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

பகத் பாசிலை அடுத்து 'விக்ரம்' படத்தில் இணைந்த மேலும் ஒரு மலையாள நடிகர்?

கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படமான 'விக்ரம்' குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடும் ஐசிஎம்ஆர்? என்ன காரணம்?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடப் போவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியிட்டு உள்ளது.

ஏன் இப்படி செய்தீர்கள்? முதல்வருக்கு 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன் கேள்வி

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது என்பது தெரிந்ததே.

உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்த சூர்யாவின் சூப்பர்ஹிட் படம்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் அது மட்டுமின்றி

அடுத்த படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க ஆர்ஜே பாலாஜி திட்டம்!

ஆர்ஜே பாலாஜியின் 'எல்கேஜி' மற்றும் 'மூக்குத்தி அம்மன்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்தது.