படப்பிடிப்பில் நடிகர் சேரனுக்கு காயம் ஏற்பட்டது எப்படி?

  • IndiaGlitz, [Thursday,August 05 2021]

நடிகரும் இயக்குனருமான சேரன் படப்பிடிப்பின்போது காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இயக்குனர் நந்தா பெரியசாமி என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஆனந்தம் விளையாடும் வீடு’. இந்த படத்தின் கதைப்படி ஒரு குடும்பத்தினர் எப்படி கஷ்டப்பட்டு வீடு கட்டுகின்றனர் என்பது போன்ற காட்சிகள் திண்டுக்கல் அருகே படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக உண்மையிலேயே படக்குழுவினர் வீடு கட்டுவதாக தகவல்.

அந்த வகையில் வீடு கட்டுவதற்காக இயக்குனர் சேரன் கல் எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென கால் தவறி கீழே விழுந்ததாகவும், இதனையடுத்து அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தலையில் காயம் பட்ட இடத்தில் எட்டு தையல்கள் போடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன, ஆனால் அதே நேரத்தில் தன்னால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட கூடாது என்பதற்காக காயத்திற்கு தையல் போட்ட உடன் அவர் தொடர்ச்சியாக நடித்து கொடுத்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்தப் படத்தில் சேரன், சிங்கம்புலி, சரவணன், விக்னேஷ், சினேகன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.