close
Choose your channels

இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகர் காலமானார்!

Sunday, September 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராபர்ட் ராஜசேகர் என்ற இரட்டை இயக்குனர்களில் ஒருவராகிய ராஜசேகர் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் இன்று காலை சிகிச்சையின் பலனின்றி காலமானார்.

ராபர்ட்-ராஜசேகர் ஆகிய இரட்டையர்கள் பாலைவனச்சோலை, கல்யாண அகதிகள், தூரம் அதிகமில்லை, சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். மேலும் இவர்கள் ‘ஒருதலைராகம்’ உள்பட ஒருசில படங்களுக்கு ஒளிப்பதிவாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.

மேலும் ராஜசேகர் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான ‘சரவணன் மீனாட்சி’ உள்பட ஒருசில தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சின்னத்திரை சங்கத்திலும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் பணிபுரிந்த ராபர்ட் கடந்த ஆண்டு உடல்நலக்கோளாறால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் ராஜசேகர் அவர்களுக்கு கோலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.