close
Choose your channels

படக்குழுவின் நலன் கருதி நடிகர் ஜெய் எடுத்த ரிஸ்க்: குவியும் பாராட்டுக்கள்!

Friday, July 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜெய், படக்குழுவின் நலன்கருதி எடுத்த ரிஸ்க் காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் ஜெய் என்பதும் தற்போது அவர் ஒரே நேரத்தில் ஆறு படங்களில் நடித்து பிஸியாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜெய் நடிப்பில், இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில், பத்ரி என்பவர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் ஜெய் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன.

இந்த காட்சியில் மேஜையை அவர் உடைக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்த காட்சி கொஞ்சம் ரிஸ்க் என்பதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு படமாக்கப்பட்டது. இருப்பினும் இந்த காட்சியில் நடிக்கும் போது ஜெய்யின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் உடனடியாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனால் அன்றைய தினம் படப்பிடிப்பை முடிக்காவிட்டால் அதே இடத்தில் மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காது என்ற சூழ்நிலையை புரிந்துகொண்டு ஜெய், வலியையும் பொருட்படுத்தாமல் காயத்துடன் அன்றைய தினம் நடித்து முடித்தார். அதன்பின்னரே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. படக்குழுவினர் நலன் கருதி எடுத்த ரிஸ்க் எடுத்து நடித்து கொடுத்த ஜெய்க்கு படக்குழுவினர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.