close
Choose your channels

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ!

Wednesday, February 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சிம்புவின் தீவிர ரசிகர்களை மட்டும் திருப்தி செய்தது. இந்த நிலையில் அவருடைய அடுத்த படமான 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது ஜெய் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சிம்புவுடன் ஜெய் 'வேட்டை மன்னன்' என்ற படத்தில் நடிக்கவிருந்தார் என்பதும் ஆனால் அந்த படம் எதிர்பாராத வகையில் கைவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்புவுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவிருக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.