10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், 10 கிராமங்களை காப்பாற்றிய நடிகர் கார்த்தி!

  • IndiaGlitz, [Friday,September 18 2020]

ஒரு பக்கம் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவரது சகோதரர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் விவசாயிகளுக்கு உதவி செய்துவரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல விவசாயிகளுக்கு உதவி செய்துள்ள உழவன் பவுண்டேஷன் தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் என்ற பகுதியில் உள்ள சூரவள்ளி கால்வாயை சுத்தப்படுத்தி வருகிறது.

கிட்டத்தட்ட பதிமூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த கால்வாய் முழுவதும் செடிகொடிகளாகவும் புதர்களாகவும் இருக்கும் நிலையில் இந்த கால்வாயை சுத்தப்படுத்த ரூபாய் 4 லட்சம் உழவன் பவுண்டேஷன் செலவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 21 நாட்களாக இந்த கால்வாயை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்த பணி முடிந்து விட்டால் ராதாபுரம் பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் என்பது மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள 10 கிராமத்தில் உள்ள பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் கார்த்தியின் இந்த முயற்சியை அந்த பகுதியில் உள்ளவர்கள் பாராட்டி வருகின்றனர்.

More News

இன்னும் ஒரே ஒருநாள் தான், எங்க தல வர்றாரு விசில் போடு: பிரபல நடிகையின் டுவீட்

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது என்பதும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளது என்பதும் தெரிந்ததே 

பிறந்தநாளில் நயனுடன் ரொமான்ஸ் போஸில் விக்னேஷ் சிவன்: வைரலாகும் புகைப்படம்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த சில நாட்களாக கோவா சுற்றுப்பயணத்தில் உள்ளனர் என்பது தெரிந்ததே.

நள்ளிரவு 12 மணிக்கு அடுத்த பட தகவலை அறிவிக்கும் பிரபல இயக்குனர்!

கோலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'சைக்கோ' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

16 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபல இயக்குனரால் கிராமத்துக்கு திரும்பும் சிம்பு!

சிம்பு நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் நகரத்து கதையம்சம் கொண்ட படங்களாகவே இருந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு ஹரி இயக்கிய 'கோவில்' என்ற திரைப்படம் முழுக்க முழுக்க

சென்னை கல்லூரி மாணவி திடீர் தற்கொலை: செல்போன் காரணமா?

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் செல்போனில் அதிகநேரம் விளையாடிக் கொண்டிருந்ததை பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை