close
Choose your channels

ரஜினி, கமல் கூட்டு பிரார்த்தனையில் இணைந்த மாஸ் நடிகர்: பரபரப்பு தகவல் 

Wednesday, August 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்காக ஒரு கூட்டுப் பிரார்த்தனை நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

நாளை அதாவது ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 6.05 வரை இந்த பிரார்த்தனை நடைபெற இருப்பதாகவும் இந்த பிரார்த்தனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏஆர் ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவரவர் வீட்டிலிருந்து கலந்து கொள்ளும் இந்த பிரார்த்தனையில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் எஸ்பிபி அவர்களின் இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் தானும் கலந்து கொள்வதாக தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார். இந்த தகவலை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இதனை நடிகர் சூர்யா, ரீடுவீட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த திரையுலகினர்களின் கூட்டு பிரார்த்தனையால் எஸ்பிபி அவர்கள் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இப்போது தற்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.