close
Choose your channels

துப்பாக்கியை எடுக்கவும் தயாராக இருக்கிறேன்! பாஜக பிரச்சார கூடத்தில் தூள் கிளப்பிய பிரபல நடிகர்!

Monday, April 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து திரையுலகினர் சூடு பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட தேசிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணிக் அமைத்துள்ள கட்சிகளும், தங்களுடைய பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆளும் கட்சியான, அதிமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் கார்த்தி. இவர் தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மிகவும் ஆக்ரோஷமாக, உத்வேகத்துடனும் பாஜகவிற்கு ஆதரவாக பேசினார்.

குறிப்பாக... தேவைப்பட்டால் துப்பாக்கி கையில் எடுத்து இந்த நாட்டின் எல்லைக்கு சென்று போராடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் தான் ஒரு பைலட் ஆகி, ராணுவத்தில் சேர ஆசைப்பட்டதாகவும், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற முயற்சித்ததாகவும் தெரிவித்தார். ஆனால் விதியின் வசத்தால் நடிகராக மாறி விட்டதாகவும் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார்.

இந்த வயதிலும் நாட்டுப்பற்றுடன், துப்பாக்கி ஏந்தி எல்லையில் போராட தயாராக இருப்பதாக தெரிவித்த கார்த்தி, தூத்துக்குடி மக்கள் அதிமுகவுக்கு கொடுக்கும் ஆதரவை பார்த்து, இந்த கட்சியில் சேர்ந்து பணியாற்றுவது என தான் எடுத்துள்ள முடிவு சரி என்று தோன்றுவதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.