கிராமத்தில் விவசாயியாக மாறிய பிரபல ஹீரோ!

  • IndiaGlitz, [Thursday,May 21 2020]

தமிழ் திரை உலகில் ’மதயானைகூட்டம்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பின்னர் ’கிருமி’ ’விக்ரம் வேதா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகர் கதிருக்கு கோலிவுட் திரையுலகில் திருப்புமுனையை கொடுத்த படம் ’பரியேறும் பெருமாள். இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து மிகப் பெரிய வெற்றிப் படமாக உருவானது. இதன் பின்னர் தளபதி விஜய்யுடன் பிகில் என்ற படத்தில் நடித்த கதிர், சமீபத்தில் வெளியான ‘ஜடா’ என்ற திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது கொரோனா விடுமுறையில் நடிகர் கதிர் தனது சொந்த கிராமத்தில் உள்ளார் என்றும் கிராமத்தில் அவருடைய ஒருநாள் பொழுதுபோக்கு என்ன என்பதையும் சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் நடிகர் கதிர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் முழுமையாக விவசாயியாக மாறி உள்ள ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

அந்த புகைப்படத்தில் அவர் மண்வெட்டியால் மண்ணை எடுத்துச் செல்வது போன்ற ஒரு காட்சி உள்ளது. கிராமத்தில் விவசாயிகள் சாதாரணமாக செய்யும் வேலையைத்தான் நகரத்தில் உடற்பயிற்சி என்ற பெயரில் ஜிம்மில் செய்கிறார்கள் என்று நடிகர் கதிர் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார். இதனைய்டுத்து முழுக்க முழுக்க விவசாயி ஆக மாறிய கதிர், அடுத்ததாக ஒரு முழு நீள கிராமிய படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

More News

எப்படி இருக்கான் உன் ஆளு? 'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த 'விண்ணை தாண்டி வருவாயோ' படத்தை யாரும் மறக்க முடியாது. கார்த்திக், ஜெஸ்ஸி கேரக்டர்கள் நம் மனதிற்குள்ளே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும்

சென்னையில் இன்றும் 500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில்

மருத்துவர்களின் மன அழுத்தத்தை போக்கும் 'மாஸ்டர்' பாடல்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் உலகம் முழுவதும் ஹிட்டானது என்பது தெரிந்ததே.

அவளுக்கான உலகத்தை நான் அமைத்துக் கொடுப்பேன்: பிரபல நடிகர் உறுதி

நடிகர் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ஆகிய இருவரும் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக நடித்தபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்

ஆன்லைன் வகுப்புக்காக மொட்டை மாடிக்கு சென்ற இரட்டை சகோதரிகள் தற்கொலை: திடுக்கிடும் தகவல்

ஆன்லைன் வகுப்புக்காக மொட்டை மாடிக்குச் சென்ற இரட்டைச் சகோதரிகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது