close
Choose your channels

வேப்பமர நிழல், கிணத்து குளியல், மண்வெட்டி வேலை, தாயம்: பிரபல நடிகரின் ஒருநாள் பொழுது

Saturday, May 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா விடுமுறையில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வரும் நிலையில் மதயானைக்கூட்டம், பரியேறும்பெருமாள்‌, பிகில் போன்ற படங்களில் நடித்த நடிகர் கதிர், இந்த கொரோனா விடுமுறையில் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். பவானி அருகே உள்ள சின்ன கிராமத்தில் தாத்தா, பாட்டி என உறவினர்களுடன் ஜாலியாக பொழுது போவதாகவும், வீட்டில் அடைந்து கிடப்பது போலவே தெரியவில்லை என்றும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ஒருநாள் பொழுது குறித்து கூறுகையில் காலையில் சூர்ய நமஸ்காரம், பின் காலை உணவு, பின் வேப்ப மரத்து நிழலில் கயித்து கட்டிலில் உட்கார்ந்து ஒரு படம், அதன்பின் கிணத்துக்கு போய் ஒரு ஜாலி குளியல், பின் மதிய சாப்பாடு, குட்டித்தூக்கம், எழுந்தபின் உடற்பயிற்சி வாக்கிங் அதன்பின் மண்வெட்டி எடுத்து கொஞ்சம் வேலை, இரவில் தாயம் விளையாட்டு, அப்புறம் ஒரு படம் என ஒருநாள் பொழுது போவதாக நடிகர் கதிர் கூறியுள்ளார்.

இந்த கொரோனா விடுமுறையில் பார்க்காத திரைப்படங்களை பார்த்து வருவதாகவும், சமீபத்தில் பார்த்து ஆச்சரியப்பட்ட படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்றும், விரைவில் ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர் பார்க்கவும் திட்டமிட்டிருப்பதாகவும், அந்த பேட்டியில் கதிர் கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.