close
Choose your channels

மறைந்த நடிகர் லோகேஷின் மனைவி இப்படி செய்யலாமா? குடும்பத்தினர் வருத்தம்!

Thursday, October 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’மர்ம தேசம்’ என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ் சமீபத்தில் காலமான நிலையில் அவருடைய மனைவி செய்த செயல் காரணமாக அவரது குடும்பத்தினர் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

‘மர்மதேசம் ’உள்ளிட்ட சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் லோகேஷ். இவர் ஒரு திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனிஷா என்பவரை லோகேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், அவரது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்ததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விஷமருந்தி மயங்கிய நிலையில் இருந்த லோகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் லோகேஷை பிரிந்து வாழும் மனைவி அனிஷா, பார்வையாளர் போல வந்து லோகேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவரது உடல் தனக்கு வேண்டாம் என்று தடையில்லாச் சான்றிதழ் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றதாக லோகேஷன் தந்தை கூறியுள்ளார்.

எம்ஆர் ராதாவின் பரம்பரையை சேர்ந்த தான், பெரிய நடிகரின் வாரிசு என்பதை காட்டிக் கொள்ளாமல் சொந்த முயற்சியில் தனது மகனை நடிகராக்கவும் இயக்குனராக்கவும் முயற்சி செய்ததாகவும் ஆனால் திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் லோகேஷின் தந்தை வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.