வெள்ளியை அடுத்து தங்கப்பதக்கம்: நடிகர் மாதவன் மகன் மீண்டும் சாதனை: 

  • IndiaGlitz, [Monday,April 18 2022]

பிரபல நடிகர் மாதவன் மகன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை செய்த நிலையில் தற்போது தங்கப்பதக்கம் வென்ற உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோபன்ஹேகன் என்ற இடத்தில் நடந்த தனிஷ்க் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

இந்த நிலையில் தற்போது டென்மார்க் நாட்டில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தங்கம் வென்று வேதாந்த் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நடிகர் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து, ‘இந்த சாதனை மகிழ்ச்சி அளிப்பது மட்டுமின்றி நாடே பெருமை கொள்வதாகவும், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் இந்த சாதனை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, தங்கம் என அடுத்தடுத்து பதக்கங்கள் குவித்து நாட்டிற்குப் பெருமை சேர்த்த நடிகர் மாதவன் மகன் வேதாந்ததை அரசியல் கட்சி பிரமுகர்கள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

பார்வையற்றோர்களுக்கு ஆடியோ மூலம் விளக்கும் 'மாயோன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதுவரை இல்லாத அளவில் ஒரு முழு திரைப்படத்தை பார்வையற்றவர்களுக்கு ஒவ்வொரு காட்சியையும் ஆடியோ மூலம் விளக்கும் 'மாயோன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தாய்மொழியுடன் இந்தி, ஆங்கிலம் கட்டாயம் தேவை: அமைச்சர் ரோஜா

தாய்மொழியுடன் இந்தி, ஆங்கிலம் கட்டாயம் தேவை என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்தியை திணிக்க கூடாது என்றும் ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

'நிலை மறந்தவன்' படத்தில் ஜோதிகா கேரக்டர் ஏன்?  எச் ராஜா விளக்கம்

'நிலை மறந்தவன்' என்ற திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா கேரக்டர்கள் ஏன் என்பது குறித்து பாஜக பிரமுகர் ஹெச் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

20 வருடங்களுக்கு முன் நடித்த காமெடி காட்சி: பிரபுதேவா-வடிவேலு லேட்டஸ்ட் வீடியோ

20 வருடங்களுக்கு முன் நடித்த காமெடி காட்சியை ஞாபகப்படுத்தும் வகையில் பிரபுதேவா வெளியிட்ட வடிவேலுவின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

மோடி குறித்து கூறிய கருத்தை திரும்ப பெறுகிறாரா இளையராஜா: அவரே அளித்த விளக்கம்!

பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கார் ஆகியோர்களை ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் என இளையராஜா