ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு கொடுத்த மாதவன்: என்ன சொல்லியிருக்கின்றார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,August 03 2021]

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஷில்பா ஷெட்டியிடமும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் இந்த விவகாரத்தில் அவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷில்பா ஷெட்டிக்கு நடிகர் மாதவன் தனது ஆதரவை தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார், அதில் ’எனக்கு தெரிந்து வலிமையான மனிதர்களில் நீங்களும் ஒருவர். இந்த சவாலையும் நீங்கள் கண்டிப்பாக கருணையுடனும் கண்ணியத்துடனும் வெல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுதாக உள்ளது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நான் எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஷில்பா ஷெட்டி நேற்று வெளியிட்ட உருக்கமாக அறிக்கை ஒன்றில், ‘கடந்த சில நாட்களாக, எல்லா விவகாரங்களும் சவாலாக இருந்தது. நிறைய வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுகள் எங்கள் மீது உள்ளன. ஊடகங்கள் மற்றும் நலம் விரும்பிகளால் என் மீது நிறைய தேவையற்ற கவனம் செலுத்தப்பட்டது . எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்துக்கும் நிறைய கேள்விகள் எழுந்தன. இந்த வழக்கில் கருத்து கூறுவதை தவிர்க்கிறேன், எனவே தயவுசெய்து என் சார்பாக தவறான செய்திகள் வெளியிடுவதை நிறுத்துங்கள்.

நடந்து கொண்டிருக்கும் விசாரணை மும்பை போலீஸ் மற்றும் இந்திய நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒரு குடும்பமாக, நாங்கள் அனைத்து சட்ட தீர்வுகளையும் காண்போம். ஆனால், அதுவரை எனது குழந்தைகளுக்காக எங்கள் தனியுரிமையை மதிக்கும்படி, குறிப்பாக ஒரு தாயாக - நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் அரைகுறையாகத் தகவல் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் கடந்த 29 ஆண்டுகளாக ஒரு சட்டபூர்வமான இந்திய குடிமகனாகவும் கடின உழைப்பாளியாகவும் இருக்கிறேன். தயவுசெய்து சட்டம் அதன் போக்கில் செல்லட்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

More News

உடலுறவின் போது ஆணுறுப்பு உடைய வாய்ப்புள்ளதா...? காரணம்  என்ன...?

இந்த செய்தி சற்று வியப்பைத் தந்தாலும், யுனைடெட் கிங்டனின் இதுபோன்ற தகவல் வெளிவந்துள்ளது.

'அச்சமுண்டு அச்சமுண்டு' இயக்குனரின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்

பிரசன்னா-சினேகா நடிப்பில் இயக்குனர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'அச்சமுண்டு அச்சமுண்டு'. கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது

'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் தென்னிந்திய பிரபலங்கள்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிய 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

கொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி! நாம் தமிழர் பிரமுகர் கண்டனம்!

கொஞ்சமாவது நன்றியோடு இருங்கள் என விஜய் சேதுபதிக்கு நாம் தமிழர் பிரமுகர் ஒருவர் கண்டனம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்காக மூன்று வருடங்கள் காத்திருந்தேன்: விஷ்ணு விஷாலின் வைரல் டுவிட்

தமிழ் திரையுலகின் இளைதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது 'எப்.ஐ.ஆர்' மற்றும் 'மோகன்தாஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.