முன் ஜாமீன் கோரி மனு செய்த மன்சூர் அலிகான்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,April 19 2021]

கொரோனா தடுப்பூசி குறித்தும் கொரோனா வைரஸ் பரவல் கொடுத்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூரலிகான் திடீரென முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். கொரோனா வைரஸ் என்பதே இல்லை என்றும் தடுப்பூசி தேவையில்லை என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய மன்சூர் அலிகான் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என்றும் சமீபத்தில் சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்து இருந்தார்

இந்த நிலையில் மன்சூர் அலிகான் மீது எப்போது வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி போட வேண்டாம் என்று தான் சொல்லவில்லை என்றும் அந்த மனுவில் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

பொறியியல் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த சர்ப்ரைஸ்....!

இந்தவருடம் பொறியியல் செமஸ்டர் எழுதப்போகும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.

பூட்டியிருந்த வீட்டில் 200 சவரன் தங்கம் கொள்ளை… போலீசார் வலைவீச்சு!

ஒசூர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து மர்ம நபர்கள் 200 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அவரை தவிர எனக்கு வெருயாருமில்ல: செல்முருகனின் உருக்கமான பதிவு

மறைந்த நடிகர் விவேக்கின் மேலாளரும் நடிகருமான செல்முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் காலமானது குறித்து பதிவு செய்துள்ள டுவீட்டில் அவரை தவிர எனக்கு வேறு யாருமில்லை என பதிவு செய்துள்ளார். 

சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்து ஒரே சிஎஸ்கே பவுலர் இவர்தான்!

ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் இன்றைய 12வது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. சென்னை அணியை பொருத்தவரை கடந்த போட்டியில்

வேலூர் பட்டாசு கடையில் விபத்து… 2 குழந்தைகளுடன் முதியவர் உயிரிழந்த சோகம்!

வேலூர் மாவட்டம் லத்தேரி எனும் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்தக் கடையில் இருந்த உரிமையாளர்