பலாப்பழம் இருட்டா இருக்கு, கருப்பா இருக்கு.. தேர்தல் அதிகாரிகளுடன் மன்சூர் அலிகான் வாக்குவாதம்..!

  • IndiaGlitz, [Friday,April 19 2024]

வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் வழங்கப்பட்ட நிலையில் தனது சின்னம் கருப்பாக இருப்பதாகவும் இருட்டாக இருப்பதாகவும் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் சில நாட்களிலேயே அவர் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவருக்கு தேர்தல் ஆணையம் பலாப்பழ சின்னம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் மன்சூர் அலிகான் வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்த போது தனது சின்னம் பலாப்பழம் கருப்பாக இருப்பதாகவும் இருட்டாக இருப்பதாகவும் மற்ற சின்னங்கள் எல்லாம் பளிச்சென்று நன்றாக தெரியும் நிலையில் தன்னுடைய சின்னம் மற்றும் சரியாக தெரியவில்லை என்றும் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.

அதுமட்டுமின்றி ஓட்டு போட வந்த அவர் வரிசையில் இருக்கும் வாக்காளர்களை கண்டு கொள்ளாமல் நேராக உள்ளே சென்று வாக்கு செலுத்தியது மட்டுமின்றி தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

'அரண்மனை 4' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. குஷ்பு வெளியிட்ட புதிய போஸ்டர்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை 4'திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போகலாம் என்றும் இதே தேதியில் விஷாலின் '

கையில் என்ன ஆச்சு? ஓட்டு போட வந்த விஜய்யை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

தளபதி விஜய் சற்றுமுன் ஓட்டு போட வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் அவர் கையில் உள்ள காயத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை.. எப்படி என ஆச்சரியம்..!

குக் வித் கோமாளி சீசன் 5 வரும் 27ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே ஒரு படம் தான்.. ரூ.100 கோடி வசூல்.. பிஎம்டபிள்யூ கார் வாங்கிய இயக்குனர்.. குவியும் வாழ்த்துக்கள்.!

தமிழ் திரை உலகில் ஒரே ஒரு படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கிய நிலையில் அந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த நிலையில் தற்போது அவர் பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளதாக தகவல்

தமன்னாவை மிரட்டிய மர்ம நபர்.. போன் உரையாடலில் என்ன நடந்தது? அதிர்ச்சி வீடியோ..!

நடிகை தமன்னா தன்னை ஒருவர் போனில் மிரட்டியதாகவும் ஆனால் தான் சுதாரித்து கொண்டதால் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டதாகவும் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.