close
Choose your channels

உண்மையில் என்ன நடந்தது: ரம்யாகிருஷ்ணன் - வனிதா மோதல் குறித்து நகுல்!

Sunday, August 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் ஜோடி இந்நிகழ்ச்சியில் வனிதா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உண்மையில் அன்றைய நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பது குறித்து நடுவர்களில் ஒருவரான நகுல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அன்றைய நிகழ்ச்சியின் போது வனிதா இன்னும் நன்றாக ஆடி இருக்கலாம் என்று நடுவர்களாகிய நாங்கள் இருவருமே கூறினோம் என்றும், ஆனால் வனிதா தான் வேறு விதமாகப் பேசினார் என்றும் தெரிவித்தார். நான்கு நிமிடங்களில் அவர் இரண்டு நிமிடம் உட்கார்ந்து கொண்டே இருந்ததால் அவர் எழுந்து ஆட தொடங்கும்போது அதிக எனர்ஜியுடன் ஆடுவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் என்றும், ஆனால் அவருடைய அம்மன் நடனத்தில் எங்களுக்கு திருப்தி இல்லை என்று அதனால் இன்னும் நன்றாக நாடி இருக்கலாம் என்று நாங்கள் சொன்னோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளருடன் இன்னொரு போட்டியாளரை எப்படி ஒப்பிடாமல் தீர்ப்பு சொல்ல முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நிகழ்ச்சி முடிந்து நான் வீட்டுக்கு போனபிறகு வனிதா அசிங்கமாக பேசியதாக டீமில் உள்ளவர்கள் சொன்னார்கள் என்றும் என்னை கூட விடுங்கள், ஆனால் ரம்யா கிருஷ்ணனிடம் வனிதா கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நகுலின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.