கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோ!

  • IndiaGlitz, [Tuesday,August 24 2021]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் ஏற்கனவே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் ஆகிய இரண்டு ஹீரோக்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு ஹீரோ இணைந்துள்ள தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடிகர் நரேன் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து நடிகர் நரேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் இயக்கிய ’சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் நரேன் ,அதன்பின்னர் ’அஞ்சாதே’ உள்பட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து இருக்கிறார் என்பதும், ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘விக்ரம்’ படத்தில் மேலும் ஒரு ஹீரோ இணைந்திருப்பது அந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.