close
Choose your channels

பா ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்: 'சார்பாட்டா பரம்பரை' படம் குறித்து நடிகர் நாசர்!

Monday, July 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை திரை உலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் இந்த படம் குறித்து ஒரு சில குறைகளை கூறினாலும் பெரும்பாலானோர் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்யா மட்டுமின்றி சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர்கள் கூட ரசிகர்களின் கவனத்தை பெற்றதும், பாராட்டை பெற்று வருவதும் தான் இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் ஓடிடியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல நடிகர் நாசர் ‘சார்பாட்டா பரம்பரை’ படம் பார்த்துவிட்டு இயக்குனர் ரஞ்சித்துக்கு கடிதம் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ’தம்பி ரஞ்சித் உன்னை நான் பாராட்ட மாட்டேன், உன் கையைப் பிடித்து ஒரு நூறு முத்தங்கள் கொடுத்து நன்றி என்று ஒரு வார்த்தை மனதார சொல்வேன். இப்படி ஒரு படம் எம் சமூகத்திற்கு கொடுத்ததற்கு’ என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.