பா ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்: 'சார்பாட்டா பரம்பரை' படம் குறித்து நடிகர் நாசர்!

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை திரை உலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் இந்த படம் குறித்து ஒரு சில குறைகளை கூறினாலும் பெரும்பாலானோர் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்யா மட்டுமின்றி சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர்கள் கூட ரசிகர்களின் கவனத்தை பெற்றதும், பாராட்டை பெற்று வருவதும் தான் இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் ஓடிடியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல நடிகர் நாசர் ‘சார்பாட்டா பரம்பரை’ படம் பார்த்துவிட்டு இயக்குனர் ரஞ்சித்துக்கு கடிதம் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ’தம்பி ரஞ்சித் உன்னை நான் பாராட்ட மாட்டேன், உன் கையைப் பிடித்து ஒரு நூறு முத்தங்கள் கொடுத்து நன்றி என்று ஒரு வார்த்தை மனதார சொல்வேன். இப்படி ஒரு படம் எம் சமூகத்திற்கு கொடுத்ததற்கு’ என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இறந்த பின்பு குறட்டை விட்டு தூங்கிய நபர்… மருத்துவர்களே வியந்துபோன அதிசயம்!

ஸ்பெயின் நாட்டில் சிறையில் இருந்த ஜிமென்ஸ் எனும் நபர், உயிரிழந்த

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ரஜினிகாந்த் நண்பரின் பேத்தி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பரின் பேத்தி நடிகை தன்யா ராம்குமார் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இணைந்த அனிருத்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்திற்கு வந்து விட்டது என்பதும், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த ஒரு படத்தின்

யோகிபாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லெஜண்ட் சரவணன்!

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அது மட்டுமின்றி அவரது பிறந்தநாளில் அவரது மகனின் பெயர் வைக்கும் நிகழ்ச்சியையும்

கார் விபத்து: யாஷிகா கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா நேற்று தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயம்