close
Choose your channels

தன்னை திட்டியவர்களுக்கு நன்றி கூறிய பிரபல நடிகர்

Saturday, March 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ‘வால்டர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்ற நட்ராஜ் சுப்பிரமணியம் பதிவு செய்த ஒரு டுவிட்டுக்கு நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர். தன்னை திட்டிய அனைவருக்கு அவர் நன்றி கூறி ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து பதிவு செய்துள்ளதாவது:

என்னை திட்டி தீர்த்தமைக்கு நன்றி.. எனது பதிவில் யாரையும் தவறாக பேசவில்லை.. என் முகம் தெரியாதோர் என்னை கெட்ட வார்த்தைகளில் பேசுவது அநாகரிகம்.... உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விலகலாம்... உங்கள் நல்ல நோக்கம் தழைத்தோங்க வாழ்த்துக்கள்.. என்று பதிவு செய்துள்ளார்.

முன்னதாக நடிகர் நட்டி நட்ராஜன் தனது சமூக வலைத்தளத்தில், ‘கேள்வியின் நாயகனை கண்டதெல்லாம் கேள்வி கேக்குது.... நாயும் நரியும் பாக்க ஒரே மாதிரி இருக்கும்... நாயா நரியான்னு கண்டு பிடிக்கறது தாண்டா வாழ்க்கை.... சிங்கத்துக்கு பலத்த சோதிக்காத... சோதிக்க கடவுளா இருக்கணும்.... என்று பதிவு செய்திருந்தார் என்பதும், இந்த பதிவுக்குத்தான் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.