close
Choose your channels

இறப்பதற்கு முன் நிதிஷ் வீரா பேசிய உணர்ச்சிவசமான வீடியோ!

Monday, May 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ்க்கு இன்று ஒரே நாளில் இயக்குனர் அருண்ராஜ் காமராஜரின் மனைவி சிந்துஜா மற்றும் நடிகர் நிதிஷ் வீரா ஆகிய இருவர் பலியாகியுள்ளது உள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் கொரோனாவால் பலியான நிதிஷ் வீரா இறப்பதற்கு முன் பேசிய உணர்ச்சிவசமான வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தனுஷுடன் நடித்த அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் அந்த வீடியோவில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ்க்கு நன்றி தெரிவித்து பேசியுள்ளார்.

வெற்றிமாறன் அவர்கள் இல்லை என்றால் இந்த படத்தில் நான் இல்லை என்றும் அவருக்கு தனது மிகப்பெரிய நன்றி என்றும் கூறியுள்ளார். அதேபோல் புதுப்பேட்டை படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் அவர்களுடன் இணைந்து நடித்ததாகவும், தனக்கு அவர் மிகப் பெரிய ஆறுதலாக இருந்தார் என்றும், தன்னுடைய நடிப்பை அவருக்கு ஊக்குவிப்பார் என்றும் அவருக்கும் தனது மிகப்பெரிய நன்றி என்று கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் அந்த படத்தில் தன்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் உணர்ச்சிவசப்பட்டு அந்த வீடியோவில் நிதிஷ் வீரா பேசி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.