close
Choose your channels

கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பிய தமிழ் நடிகர்-அரசியல்வாதி!

Monday, August 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கும் மேலானவர்கள் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நடிகரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர்-அரசியல்வாதி கருணாஸ் ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வரும் போது அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் ’தான் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருவதாகவும் மருத்துவர்கள் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார். அதேபோல் தனது தந்தை நல்ல முறையில் குணமாகி வருவதாக அவரது மகனும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பத்து நாட்கள் சிகிச்சை பெற்ற நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் தற்போது கொரோனாவில் இருந்தே பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளார். தான் குணமடைய உதவி செய்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கருணாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.