'பொன்னியின் செல்வன்' படத்தின் பிரபு கேரக்டர்: வேற லெவலில் வைரல்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இன்று மாலை மும்பையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் லைகா நிறுவனம் வேற லெவல் புரமோஷன் செய்து வரும் நிலையில் தற்போது பிரபுவின் கேரக்டர் குறித்த ஸ்டில்களை வெளியிட்டுள்ளது. நடிகர் பிரபு இந்த படத்தில் பெரிய வேளாளர் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் அவரது கேரக்டரின் புகைப்படம் வேற லெவல் வைரலாகிறது. மேலும் ராஜ ராஜ சோழனுடன் பெரிய வேளாளர் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் ஹாலிவுட் நடிகர்: வேற லெவல் திட்டம்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ: நெட்பிளிக்ஸ் சூப்பர் அப்டேட்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டு

'பொன்னியின் செல்வன்' பார்த்த பிறகு இதையெல்லாம் நிறுத்திவிட்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை பார்த்த பிறகு ஓடிடியில் பிரமாண்டமான படங்களை பார்க்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் பேசியுள்ளார் 

'பொன்னியின் செல்வன்' நகைகள் விற்பனை.. போட்டி போட்டு வாங்கும் பொதுமக்கள்!

'பொன்னியின் செல்வன்' நகைகள் நகை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் இதனையடுத்து அந்த நகைகளை வாங்க பொது மக்கள் போட்டி போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய 18 வயது இளம்பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை?

இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய 18 வயது இளம் பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.