திருப்பதியில் குடும்பத்துடன் நடிகர் பிரபு: என்ன வேண்டி கொண்டார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகினர் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர்
இந்த நிலையில் இன்று இளைய திலகம் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய பிரபு குடும்பத்தினருக்கு ரங்கநாதன் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பிரசாதங்களை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரபு ’இந்த கொரோனாவில் இருந்து சீக்கிரம் அனைவரும் விடுபட வேண்டும் என்பதற்காகவே ஏழுமலையானை தரிசிக்க வந்துள்ளோம். திருப்பதிக்கு எப்போது வந்தாலும் நல்ல தரிசனம் கிடைக்கும். அதேபோல் தற்போது நல்ல தரிசனம் கிடைத்தது. இங்கு வந்த எங்கள் குடும்பத்தினரிடம் ஆந்திரா தெலுங்கானா மக்கள் மிகவும் பிரியமாக இருப்பதை பார்த்து நான் நன்றி கூறுகிறேன். எல்லோரும் நன்றாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள அனைவரும் கொரோனாவில் இருந்து விடுபட ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.