தெலுங்கு படத்தில் வில்லனாகும் பிரபல தமிழ் ஹீரோ

  • IndiaGlitz, [Saturday,April 01 2017]

பாலிவுட் நாயகர்கள் அக்சயகுமார், விவேக் ஓபராய் ஆகியோர்கள் தமிழ் படங்களில் வில்லனாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் ஹீரோ ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமாகி பல தமிழ் படங்களில் நாயகனாக நடித்த பிரசன்னா, மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' படத்தில் வில்லனாக நடித்தார். அதன்பின்னர் பல படங்களில் ஹீரோ மற்றும் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நிலையில் தற்போது 'திருட்டுப்பயலே 2', 'துப்பறிவாளன்', மற்றும் 'பவர்பாண்டி' ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம்தேஜ் புதிய ஆக்சன் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க தற்போது பிரசன்னா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

More News

தளபதி 61: அசர வைக்கும் லொகேஷனில் அடுத்தகட்ட படப்பிடிப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இரண்டு கட்டமாக முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது

மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி தலைமை ஏற்பது உறுதி. சீனிவாசன் நம்பிக்கை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை அடுத்த வருடம் முடியவுள்ள நிலையில் அந்த அணியை வாங்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி சேர்மன் சீனிவாசன் தெரிவித்துள்ளார்

ஜி.வி.பிரகாஷின் 'குப்பத்து ராஜா'வில் நாயகியாகும் பிரபல நடிகை

பிரபல ஒளிப்பதிவாளர் பாபா பாஸ்கர் இயக்கும் முதல் படமான 'குப்பத்து ராஜா' என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தியை சமீபத்தில் பார்த்தோம்

சி.ஆர்.சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு. ஆர்.கே.நகர் மக்கள் ஆத்திரம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தபோது அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த சி.ஆர்.சரஸ்வதி 'அம்மா இட்லி சாப்பிட்டார், நலமாக இருக்கின்றார்.

ரஜினி பட டைட்டிலில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி.