close
Choose your channels

நடிகர்-தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

Sunday, May 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கொரோனா தொற்று மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் காலமாகி வருவது திரையுலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் நடிகர் விவேக், இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த் உள்பட முக்கிய திரையுலக பிரபலங்கள் காலமானது திரையுலகினர் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நடிகர், தயாரிப்பு மேற்பார்வையாளர், தயாரிப்பாளர் அந்தோணி சேவியர் என்பவர் காலமானார். அவர் தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து இன்று காலை 11 மணிக்கு காலமானார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் நாளை அவரது நல்லடக்கம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது

மறைந்த நடிகர்-தயாரிப்பாளர் அந்தோணி சேவியர் அவர்களுக்கு ஜோஸ்பின் ஜெயா என்ற மனைவியும் அபி, ஜெய்சன் ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான் மகான் அல்ல, சிறுத்தை, மாஸ், பாண்டியநாடு, ஜீவா, பாயும்புலி, ஈஸ்வரன் போன்ற படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்த அந்தோணி சேவியர். சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பதும் பல படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.