முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு சரத்குமார் ஆதரவு

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழக முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் அணி வெற்றி எண்ணிக்கையை நோக்கி வீறுநடை போட்டு வருகிறது. அனேகமாக இன்று இரவுக்குள் அவருக்கு ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை கிடைத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவினர் மட்டுமின்றி மாற்று கட்சியின் தலைவர்களும் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சற்று முன்னர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் நடிகர் சங்க தலைவருமான சரத்குமார் முதல்வருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்

மேலும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று சரத்குமார் கூறியுள்ளார்

More News

துரோகி அணியில் பாண்டியராஜன். சி.ஆர்.சரஸ்வதி ஆவேசம்

அதிமுகவின் மூத்த அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகளே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அவரது ஆதரவாளர்களாக மாறி வருகின்றனர்

ஆட்சி அமைக்கும் எண்ணிக்கையை நெருங்கியது ஓபிஎஸ் அணி. மேலும் 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சமீபத்தில் மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தன்னந்தனியாக தொடங்கிய போராட்டம் தற்போது ஆச்சரியப்படும் வகையில் வலுபெற்று கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது...

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக மூத்த அமைச்சர்

தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் ஓட்டுமொத்தமாக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் ஒருசில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டுள்ள சசிகலா, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதை தமிழக மக்கள் ஒரு வெறுப்புடனே பார்த்து வருகின்றனர்...

கூவத்தூரில் சசிகலா சிறைவைப்பா? பொதுமக்கள் கொந்தளிப்பு

சென்னை ஈசிஆர் அருகே உள்ள கூவத்தூர் சொகுசு ரிசார்ட் ஒன்றில் கடந்த நான்கு நாட்களாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டை சுற்றிலும் சசிகலாவின் ஆட்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களது அட்டூழியதால் அப்பகுதி கிராமத்து மக்கள் பெரும் பாதிப்பு அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது...

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா உண்ணாவிரதமா? சென்னையில் பரபரப்பு

தமிழகத்தை ஆட்சி செய்வது யார் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஆளுனர் வித்யாசாகர் ராவ், சென்னை வந்து இரண்டு நாட்கள் ஆகியும் எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளார். நேற்று அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டு பின்னர் அது மறுக்கப்பட்டது...