close
Choose your channels

பிரபல தமிழ் நடிகர் வீட்டில் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர்: பெரும் பரபரப்பு

Wednesday, May 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராதாரவி வீட்டில் தனிப்படுத்துதல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் நடிகர் ராதாரவிக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டிற்கு நடிகர் ராதாரவி தனது உறவினர் 8 பேருடன் கடந்த 10ஆம் தேதி வந்துள்ளார். இது குறித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோத்தகிரி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் நடிகர் ராதாரவியின் வீட்டில் உள்ளவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் ராதாரவி வீட்டில் தனிமைபடுத்துதல் ஸ்டிக்கரையும் சுகாதாரத்துறையினர் ஒட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.