நயன்தாரா குறித்து சர்ச்சை பேச்சு: ராதாரவி மீது திமுக அதிரடி நடவடிக்கை!

சமீபத்தில் நடைபெற்ற 'கொலையுதிர்க்காலம்' புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக பாடகி சின்மயி, இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்குனர் அனிதா உதூப், வரலட்சுமி உள்ளிட்டோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் ராதாரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்

இந்த நிலையில் ராதாரவியின் இந்த கருத்தால் அவர் சார்ந்து இருக்கும் திமுகவையும் சமூக வலைத்தள பயனாளிகள் கடுமையாக விமர்சித்தனர். தேர்தல் நேரத்தில் ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதை அடுத்து ராதாரவியை திமுக அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்' என அறிவிக்கப்பட்டுள்ளது

More News

மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்த கமல்

கடந்த 20ஆம் தேதி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான க

கமல்ஹாசன் கூட்டத்தை தடுத்து நிறுத்திய பறக்கும் படை: பெரும் பரபரப்பு

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் மக்களவை வேட்பாளர்களின் முதல் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று கோவையில் நடைபெறும்

நயன்தாரா - ராதாரவி பிரச்சனை குறித்து ராதிகா!

நேற்று நடைபெற்ற 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராதாரவி பேசியது,

ராதாரவி பேச்சுக்கு விக்னேஷ் சிவன் ரியாக்சன்!

நேற்று நடைபெற்ற நயன்தாராவின் 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தது

ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பமா?

பாலிவுட் நடிகையும் நடிகர் அபிஷேக்பச்சனின் மனைவியும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில்