தெர்மோகோலை அந்தம்மா மேல போட்டிருந்தால் உயிர் பிழைத்திருப்பாங்க. ராதாரவி கிண்டல்

  • IndiaGlitz, [Tuesday,April 25 2017]

தமிழக அமைச்சர் ஒருவர் வைகை அணையின் நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோலை போட்டு மூட செய்த முயற்சி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த விஷயம் குறித்து திரைத்துறையினர்களும் பேச ஆரம்பித்துவிட்டனர்.

நேற்று நடந்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, 'கமல்ஹாசனும் நானும் டவுசர் போட்ட காலத்தில் இருந்தே நண்பர்கள். அவர் இந்த மேடையில் தெர்மோகோல் குறித்து பேசியபோது எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. இந்த தெர்மோகோல் ஐடியா முன்பே வந்திருந்து அந்தம்மா மேல் போட்டிருந்தால் அவருடைய ஆவி போயிருக்காதே என்றுதான் எனக்கு தோன்றியது. ஏனெனில் அந்தம்மா கட்சியில் இருந்த நன்றி விசுவாசத்தால் இதை கூறுகிறேன்' என்று ராதாரவி கூறியவுடன் பலத்த சிரிப்பொலி ஏற்பட்டது.

மேலும் தனக்கு எப்போதுமே மேடையில்தான் அரசியல் பேசி பழக்கம் என்றும் டுவிட்டரில் அரசியல் பேசுவதில்லை என்றும் ராதாரவி கூறினார்.

More News

தெர்மோகோல் அமைச்சரை கலாய்த்த கமல். இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பரபரப்பாக பதிவு செய்து வருகிறார்.

விஜய் சாதாரணமாக நடந்து வந்தாலே மாஸ் ஆக இருக்கும். விஜய்சேதுபதி பட நடிகை

தர்மதுரை' படத்தில் விஜய்சேதுபதிக்கு தோழியாகவும், 'றெக்க' படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கையாகவும், 'கவண்' படத்தில் விஜய்சேதுபதியின் டீமில் ஒருவராகவும் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தங்கை, தோழி வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது புரமோஷன் ஆகி 'திருப்பதிசாமி குடும்பம்' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு இந்திய அரசின் மிகப்பெரிய விருது

பிரபல தெலுங்கு இயக்குனர் மற்றும் நடிகர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு இந்திய அரசின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாகிய தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது

டப்பிங் கலைஞர்களின் தேசிய விருது கோரிக்கை: மத்திய அரசு ஏற்குமா?

இந்திய திரைப்பட கலைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் சண்டைப்பயிற்சி இயக்குனர்களுக்கும் தேசிய விருது வழங்க வேண்டும் என்ற ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை ஏற்று இந்த வருடம் முதல் சண்டைப்பயிற்சிக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது

ஒரு ஹீரோவுக்கு எதுக்கு நான்கு ஹீரோயின்? ஜோதிகா ஆவேசம்

ஜோதிகா நடித்த 'மகளிர் மட்டும்' திரைப்படத்தின் பாடல்கள் இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வெளியானது.